
துளசி செடி இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த செடியானது பல நோய்களுக்கும் அருமருந்தாகும். இதனால்தான் பலர் தங்களது வீட்டில் இந்த செடியை வளர்க்கிறார்கள். குறிப்பாக, துளசி இலையானது சளி, இருமலில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு மட்டுமின்றி, உடலில் இன்னும் பல பிரச்சனைகளையும் சரி செய்யும்.
இப்படி பல நன்மைகள் நிறைந்துள்ள இந்த துளசி இலையின் தண்ணீரை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? எனவே, துளசி தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.
துளசி இலையின் சிறப்பு : நாம் துளசியிலேயே சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலானது சுத்தமாகும். அதுமட்டுமின்றி உடல் வெப்பநிலையையும் இது கட்டுக்குள் வைத்திருக்கும். அதுபோல துளசி இலையானது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதை தடுக்கிறது மற்றும் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
முக்கியமாக, மழைக்காலத்தில் ஏற்படும் பருவ நோய் தொற்றுக்களை தடுக்க துளசி இலையில் கஷாயம் செய்து குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் சளி, இருமல், தொண்டை போல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது. உங்களுக்கு தெரியுமா... தினமும் வெறும் வயிற்றில் சில துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால், அடி வயிற்று வலி, வயிற்று உப்புசணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: சளி இருமலுக்கு அருமருந்து துளசி ரசம்.. எப்படி செய்யணும் தெரியுமா?
வயிற்று பிரச்சனைக்கு துளசி இலையை பயன்படுத்தும் முறை :
நீங்கள் வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இளநீரில் துளசி இலை சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து குடித்தால், வலி உடனே நீங்கிவிடும்.
அதுபோல உங்களுக்கு, அசிடிட்டி பிரச்சனை இருந்தால் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
பருவகால நோய்கள் வராமல் தடுக்க :
பருவ கால நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட நீங்கள் டீ யில் சிறிதளவு துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடியுங்கள். நல்ல நிவாரணம் கிடைக்கும். அதுபோல, துளசி சாறும் மற்றும் இலைகளை எடுத்துக் கொண்டால், எந்த நோய்களும் உங்களை அணுகாது.
துளசி நீரின் நன்மைகள் :
சளி இருமல் தொண்டை புண் : பொதுவாகவே மழைக்காலத்தில் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகள் வருவது வழக்கம். ஆனால், இதனால் நீங்கள் அடிக்கடி அவதிப்படுகிறீர்கள் என்றால், துளசி நீரை தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது : துளசி நீரானது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லலாம். ஏனெனில், இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவானது கட்டுப்படுத்தப்படும். எனவே, நீங்கள் இயற்கை முறையில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினால் துளசி நீர் உங்களுக்கு பெரிதும் உதவும்.
காய்ச்சலுக்கு நல்லது : பருவமழை காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் தாக்குவது காய்ச்சல்தான். எனவே, இந்த பருவத்தில் தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி நீர் குடித்து வந்தால், எந்தவிதமான தொற்று நோய்களும் உங்களை அண்டாது மற்றும் காய்ச்சலில் இருந்தும் விடுவிக்கும்.
வாய் துர்நாற்றத்தை போக்கும் : துளசி இலையில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி நீரை குடித்து வந்தால், உங்களது வாய் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
செரிமானத்திற்கு நல்லது : தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி நீரை குடித்து வந்தால் குடல் இயக்கம் மேம்படும். இதனால் செரிமானம் எளிதாகும் மற்றும் உங்கள் வயிற்றை இது ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
எடையை குறைக்க உதவுகிறது : துளசி நீரானது செரிமானத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே, இந்த நீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வளர்ச்சிதை மாற்றம் கட்டுக்குள் இருக்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.
துளசி நீர் தயாரிக்கும் முறை : துளசி நீர் தயாரிக்கும் முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
பிறகு அதில் சிறிதளவு துளசி இலைகளை போட்டு சுமார் மூன்று நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்கு ஆறியதும் அந்த தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: குழந்தைக்கு சளி மற்றும் இருமல்? அப்ப துளசி இலைகள், கருப்பு மிளகு, தேனில் இப்படி மருந்து செஞ்சு கொடுங்க