கடுமையான வெயிலில் ஏசி இல்லாமல் இருப்பது கஷ்டம். ஆனால், ஏசி போட்டால் கரண்ட் பில் எகிறிவிடும். இதற்கு ஒரு தீர்வாக விஞ்ஞானிகள் இந்த கூலிங் பெயிண்ட்டை உருவாக்கியுள்ளனர். இந்த ஸ்மார்ட் பெயின்ட்டை வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர்களில் பூசினால், அது 97% சூரியக் கதிர்களை மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்பிவிடும். இதனால், சுவர்கள் வெப்பத்தை உறிஞ்சாது, வீட்டிற்குள் வெப்பநிலை குறைந்து, ஏசியின் தேவை குறையும்.
ஸ்மார்ட் கூலிங் பெயிண்ட்
இந்த ஸ்மார்ட் கூலிங் பெயிண்ட் ஒரு சிறப்பு பாலிமர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நுண்துளைகள் (micropores) சூரிய ஒளியை உறிஞ்சாமல், அதை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்புகிறது. மேலும், வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தையும் இது வெளியேற்றும். சோதனைகளின் போது, இந்த பெயிண்ட் பூசப்பட்ட மேற்கூரைகள், சாதாரண மேற்கூரைகளை விட 25 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியாக இருந்தது தெரியவந்துள்ளது.