வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புவோருக்குப் பொறுமை அவசியம். விதைத்து மாதக்கணக்கில் காத்திருக்காமல், வெறும் 15-20 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய ஆரோக்கியமான கீரைகள், காய்கறி இலைகளைப் பால்கனி அல்லது சிறிய தொட்டிகளில் வளர்க்கும் வழிகளை இங்கு காண்போம்.
நமது சமையலறை கடுகை மண்ணில் தூவி லேசாக தண்ணீர் தெளித்து வந்தால், 10 முதல் 15 நாட்களில் சிறிய கடுகுக்கீரைகள் (Mustard Greens) வளர்ந்துவிடும். இந்த இளம் இலைகள் லேசான காரத்தன்மையுடன், சலாட்கள் மற்றும் கூட்டுகளுக்கு தனி சுவையைக் கொடுக்கும்.
25
சத்தான முளைக்கீரை :
சந்தையில் வாங்கும் முளைக்கீரை விதைகளை மணல் கலந்த மண்ணில் பரவலாகத் தூவ வேண்டும். மிக விரைவாக முளைக்கும் தன்மை கொண்ட இது, 15 நாட்களில் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய இளம் இலைகளாக (Baby Amaranth) மாறிவிடும். இரும்புச்சத்து நிறைந்த இந்த கீரையை வளர்ப்பது மிக எளிது.
35
புதினா :
புதினாவை விதையிலிருந்து வளர்ப்பதை விட, கடையிலிருந்து வாங்கும் புதினாவின் தடிமனான தண்டுப் பகுதியைக் கொண்டு எளிதாக வளர்க்கலாம். இலையை நீக்கிய தண்டுகளை நேரடியாக மண்ணிலோ அல்லது சில நாட்கள் தண்ணீரிலோ போட்டு வைத்தால், 15 நாட்களுக்குள் புதிய கிளைகளும் வாசனையான இலைகளும் செழிப்பாக வளரத் தொடங்கிவிடும்.
நம் சமையலறையில் இருக்கும் வெந்தயத்தை மண்ணில் தூவி, மெலிதாக மண் போட்டு மூடி தண்ணீர் தெளித்து வர வேண்டும். எந்தக் காலநிலையிலும் மிக வேகமாக வளரக்கூடிய இது, சரியாக 12 முதல் 15 நாட்களில் சமையலுக்குத் தயாராகிவிடும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதால் இதை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம்.
55
சின்ன வெங்காயத் தழைகள் :
வீட்டில் இருக்கும் சிறிய சமையல் வெங்காயங்களை (Bulbs) எடுத்து, வேர் பகுதி மண்ணில் இருக்கும்படி நட்டு வைத்தால் போதும். 12 முதல் 15 நாட்களுக்குள் நீளமான, பச்சைப் பசேலென்ற வெங்காயத் தழைகள் (Spring Onions) வளர்ந்து நிற்கும். நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ் அல்லது சூப் செய்ய இவற்றை உடனே நறுக்கிப் பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.