பைனல்ஸ் அபிடிங்குற நெனப்பு கொஞ்சம் கூட இல்ல உங்ககிட்ட எதுக்கு வெளயாடுறீங்க வெறுப்பில் வார்தையைவிட்ட அய்யர்..!

First Published Nov 11, 2020, 12:05 PM IST

13வது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இறுதிப் போட்டியில் நேற்று நவம்பர் 10ஆம் தேதி டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. துபாய் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. 
 

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. எப்போதும்போல் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பட்டையைக் கிளப்பினார்கள்.
undefined
டெல்லி அணியின் முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் ரிஷப் பந்த் 56 ரன்கள் எடுக்க 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
undefined
டெல்லி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்விக்கு பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயர் கூறியதாவது
undefined
ரிக்கி பாண்டிங் எங்களுக்கு மிகப்பெரிய சுதந்தரத்தை கொடுத்திருக்கிறார் வீரர்களை உற்சாகப் படுத்தும் விதம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த ஐபிஎல் தொடர் ஓரளவிற்கு எங்களுக்கு நன்றாக அமைந்துவிட்டது.
undefined
அடுத்த வருடம் எப்படி ஆட வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்ட போகிறோம் இன்னும் பேட்டிங் சற்று அதிகமாக ஆடி இருந்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
undefined
click me!