இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இது தான்! இங்கிருந்து நடந்தே வெளிநாட்டிற்கு செல்லலாம்!

Published : Nov 15, 2024, 08:01 AM ISTUpdated : Nov 15, 2024, 08:04 AM IST

இந்திய ரயில்வேயின் பரந்த நெட்வொர்க்கில், நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள சில ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?

PREV
14
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இது தான்! இங்கிருந்து நடந்தே வெளிநாட்டிற்கு செல்லலாம்!
Last Railway Staion in India

இந்திய ரயில்வே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக உள்ளது. எனவே இந்திய இரயில்வே நாட்டின் உயிர்நாடி என்றும் அழைக்கப்படுகிறது. பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு முக்கிய இடத்திலும் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதனால் ரயில் மூலம் நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். பயணிகளுக்கு மிகவும் வசதியான வழியாக ரயில் பயணம் மாறியுள்ளது. ஆனால் இந்திய ரயில்வே பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எது என்று உங்களுக்கு தெரியுமா?

24
Last Railway Staion in India

நாட்டின் கடைசி முனையில் சில நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து எளிதாக வெளிநாடு கூட செல்ல முடியும். ஆம், நேபாளத்திற்கு மிக அருகில் பீகாரில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. அதாவது இங்கிருந்து இறங்கி நடந்தே நேபாளத்திற்கு பயணம் செய்யலாம்.

பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஜோக்பானி என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டின் கடைசி நிலையமாக பார்க்கப்படுகிறது. இங்கிருந்து நேபாளத்திற்கு மிகவும் குறைவான தூரம் தான் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து நேபாளத்திற்கு நடந்தே செல்ல முடியும். நல்ல விஷயம் என்னவென்றால், இந்திய மக்களுக்கு நேபாளம் செல்ல விசா, பாஸ்போர்ட் கூட தேவையில்லை. இது மட்டுமின்றி, இந்த நிலையத்திலிருந்து உங்கள் விமானச் செலவையும் மிச்சப்படுத்தலாம்.

எந்த VVIP ரயிலாக இருந்தாலும் இந்த ரயில் வரும் போது வழிவிட வேண்டும்!

34
Last Railway Staion in India

பீகார் தவிர, மற்றொரு நாட்டின் எல்லை தொடங்கும் மற்றொரு ரயில் நிலையம் உள்ளது. மேற்கு வங்கத்தின் சிங்காபாத் ரயில் நிலையம் நாட்டின் கடைசி நிலையமாகவும் கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் ஹபீப்பூர் பகுதியில் கட்டப்பட்ட சிங்காபாத் நிலையம் இந்தியாவின் கடைசி எல்லை நிலையமாகும். ஒரு காலத்தில் இந்த நிலையம் கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.

எனவே இந்த ரயில் நிலையத்தில் இருந்து பல பயணிகள் ரயிலில் சென்று வந்தனர், ஆனால் இன்று இந்த நிலையம் முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகளுக்காக இங்கு எந்த ரயிலும் நிறுத்தப்படுவதில்லை, இதனால் இந்த இடம் முற்றிலும் வெறிச்சோடி கிடக்கிறது. இந்த ரயில் நிலையம் தற்போது சரக்கு ரயில்களின் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

44
Last Railway Staion in India

சிங்காபாத் ரயில் நிலையம் இன்னும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வருகிறது. இங்கே இன்றும் நீங்கள் அட்டைப் பயணச் சீட்டுகளைக் காண்பீர்கள், எந்த இரயில்வேயிலும் பார்க்க முடியாது. இது தவிர, சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் நிலையம், தொலைபேசி மற்றும் டிக்கெட் தொடர்பான அனைத்து உபகரணங்களும் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்தவை.

அதே போல் தென்னிந்தியாவின் கடைசி ரயில் நிலையம் கன்னியாகுமரி ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் இன்ஜின் இல்லாத ஒரே ரயில்! வேகத்தில் ராஜ்தானி, சதாப்திக்கே டஃப் கொடுக்கும்!

Read more Photos on
click me!

Recommended Stories