மேற்கு வங்காளம்
மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்வி நிறுவனங்களும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களைத் தவிர மாநிலத்தில் உள்ள அனைத்து தன்னாட்சி, மாநில, மத்திய அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் ஏப்ரல் 17 முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆராய்ச்சி மைய்யம், (IMD) மேற்கு வங்க மாநிலத்திற்கு வெப்ப அலை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.