ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். சுமார் 6,800 கோடி செலவில் இருவழிப்பாதையாக இந்த ஜோஜிலா சுரங்கப்பாதை அமைகப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.