இதற்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர முக முக்கியமாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் பாகிஸ்தான் முழுமையாக நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இந்தியாவுடன் போருக்கு தயாராகி உள்ள பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினரும் குவிந்துள்ளனர். இந்த பதற்றத்துக்கு இடையே பாகிஸ்தான் எல்லைக்கு தவறுதலாக சென்ற இந்திய ராணுவ வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றுள்ளது.
சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இதை பாகிஸ்தான் ரத்து செய்ததால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?