கடந்த ஜூலை 19 அன்று, குடும்ப வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், பத்ரா தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கல்லால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இரவு நேரம், இருட்டாகவும் மழை பெய்துகொண்டிருந்ததாலும், பத்ரா இரு உடல்களையும் தனது வீட்டின் பின்னால் இருந்த எலுமிச்சைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளார். பின்னர் சந்தேகம் வராமல் இருக்க, அந்த இடத்தில் வாழை மரங்களை நட்டுள்ளார்.
இதையடுத்து, பத்ரா காவல் நிலையத்திற்குச் சென்று, காணாமல் போனதாகக் காவல் புகார் அளித்துள்ளார். சோனாலி மற்றும் சுமதி இருவரும் தங்கள் மகனை விட்டுவிட்டு மயூரபஞ்சில் இருந்து புறப்பட்டுவிட்டதாக தனது மாமியார் வீட்டினரிடம் தெரிவித்துள்ளார்.