சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி பாதி வற்றியுள்ள உள்ள நிலையில் ஏரியின் நடுவில் வறண்ட நிலத்தில் உள்ளாடை மட்டும் மாட்டியபடி எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏரிக்குள் சென்ற போது மனித எலும்பு கூடு குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடு ஒரு ஆண் என்பதும் 30 முதல் 35 வயது மதிக்க தக்க உடையது என நசரத்பேட்டை போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.