இதனை தொடர்ந்து அந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்திய உலகம் சுகாதார மையம், இந்தியாவை சேர்ந்த ஃபார்மா கம்பெனி தயாரித்த, கோஃபெக்ஸ்மெளின் பேபி சிரப், புரோமெதசின் ஓரல் சொல்யுஷன், மேகாஃப் பேபி சிரப், மேகிரிப் கோல்ட் சிரப்
என்ற 4 இருமல் மருந்துகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஏனெனில், இந்த மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், தலைவலி, மனநிலையில் குழப்பம், சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சில நேரம் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவையே என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் பலர் பீதியில் உள்ளனர். எனவே, இனிமேல் மருந்து கடைகளில் மருத்துக்களை வாங்கி, குழந்தைகளுக்கு உபயோகிப்பதற்கு முன்னாடி மருத்துவரிடம் தேவையான ஆலோசனை பெற்றிருப்பது அவசியமான ஒன்றாகும்.