நீங்கள் வெயிலில் வெளியே செல்கிறீர்கள் என்றால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீரிழப்புக்கு காரணமாகிவிடும். அதனால் வெளியே செல்லும்போது தண்ணீர் கொண்டு போக மறக்கவேண்டாம். எப்போதும் கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்து கொள்ளுங்கள். இதனை பிழிந்து நீருடன் அருந்துவதால் நீரிழப்பு சரியாகும். வாழைப்பழம், கரும்புச்சாறு, நுங்கு, இளநீர்,வெள்ளரிக்காய், ஆகியவை வெயிலுக்கு நல்லது. இதனால் தலைசுற்றல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்.