பிளாஸ்டிக் டப்பாவில் மீந்து போன உணவை வைத்து பிரிட்ஜில் சேமிப்பது நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன. ஏனென்றால் பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான உணவுகளை வைக்கும்போது, அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) போன்ற குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கொள்கலன்கள் பொதுவான பிளாஸ்டிக் பாத்திரங்களிலிருந்து சற்று வேறுபடுகின்றன. இவை கூடுமான வரைக்கும் நமது ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்காத பாதுகாப்பான விருப்பங்களாக கருதப்படுகின்றன.