நெல்லிக்காய் சாற்றில் தேன் மற்றும் மிளகுத்தூள் ஆகிய இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி மற்றும் மூக்கடைப்பு நீங்கும்.
கைப்பிடி அளவு புதினா இலையுடன், சிறிதளவு மிளகை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகள் அனைத்தும் நீங்கி விடும்.
எலுமிச்சை சாற்றை சூடான நீரில் நன்றாக கலக்கிய பிறகு, இதனுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சு சளி குறைந்து விடும்.
தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் கற்பூரம் சேர்த்து அந்த எண்ணெயை தொடர்ந்து நெஞ்சில் தடவி வந்தால் நெஞ்சு சளி குணமடைந்து விடும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். நெஞ்சு சளிப் பிரச்சனை உங்களை விட்டு ஓடியே விடும்.