1. தேனில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு உடனடி சக்தியை வழங்கும்.
2. ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் வயிற்றை அமைதிப்படுத்தும் மற்றும் மென்மையான செரிமானத்தை ஊக்குவிக்கும்.
3. தேனில் இருக்கும் பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும்.
4. தேனில் இயற்கையாகவே பாக்டரிய எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளதால் அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் பருவ கால தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.
5. தேன் நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் எடை இழப்புக்கு மறைமுகமாக உதவும்.
குறிப்பு : சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இந்த தேன் கலந்த நீரை குடிக்கக்கூடாது. அதுபோல தேனில் சர்க்கரை உள்ளதால் இது அதிகமாக எடுத்துக் கொண்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.