ப்ரோக்கோலியில் காணப்படும் சக்திவாய்ந்த ஆண்டிஆக்சிடண்டுகள், உடலில் ஆக்ஸிசன் தட்டுப்பாடு கொண்டவர்களுக்கு அருமருந்தாகும். நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் குணநலன்கள் ப்ரோக்கோலியில் காணப்படுகிறது.
அனைத்து பழங்களும் காய்கறிகளும் மூலமாக நமக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை தான். எனினும், ப்ரோக்கோலியின் பயன்பாடு என்பது சற்று வித்தியாசமானது. ஒவ்வாமை மற்றும் தைராய்டு பாதிப்பு இல்லாதவர்கள், ப்ரோக்கோலியை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ப்ரோக்கோலியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. உயர் எல்டிஎல் அளவுகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.