திடீரென கடுமையான தலைவலி ஏற்படுவது மூளையில் இரத்த உறைவு இருப்பதை குறிக்கலாம். பொதுவாக தலைவலி மன அழுத்தம், நீரிழிப்பு போன்றவையால் ஏற்பட்டாலும், சில நேரங்களில் கடுமையான தலைவலி மூளையில் உள்ள அழுத்தத்தை குறிக்கும். இதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்யக் கூடாது. தலைவலியுடன் குமட்டல் உணர்வு, பார்வை கோளாறுகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பது மூளையில் இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.