கடந்த 2020ஆம் ஆண்டிற்கான ஈஎம்ஆர் (EMR) தகவல்களின்படி, இந்தியாவில் சந்தையில் பீர் விற்பனையால் 371 பில்லியன் மதிப்பு விற்பனையாகிவருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்தத் தொழில் சுமார் 662 பில்லியன் ரூபாயாக மதிப்பு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆல்கஹால் அதிகமுள்ள பீர் வகைகளை இங்கு காணலாம்.
ஓல்ட் மாங்க்
இந்த பீரில் 5 சதவீதம் முதல் 42.5 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது. இது 1954இல் ஆரம்பிக்கப்பட்டது. 1990களில் மது அருந்த தொடங்கியவர்கள் ஓல்ட் மாங்க் குறித்து பல விஷயங்களை கூறுவர். இதற்கென எந்த விளம்பரமும் இல்லையென்றாலும் பலரும் இதனை தெரிந்து கொள்ள அதுவும் ஒரு காரணம். ஓல்ட் மாங்க் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானமாக இருந்து வருகிறது.