Water With Meals : உணவு சாப்பிடும் இடைவெளியில் தண்ணீர் அருந்துவது சரியா?
First Published Sep 19, 2022, 12:45 PM ISTமனித உடலுக்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலுக்கு நீரின் அளவு வலிமையையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. அதன்காரணமாக பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள், மனிதன் நாளொன்றுக்கு 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உடல்நலனின் தேவைக்கு போதியளவில் தண்ணீரின் அளவு இருக்க வேண்டும். இல்லையென்றால் பல்வெறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகளை நமக்கு ஏற்படும். தண்ணீர் அருந்தாமல் ஒரு சில வாரங்கள் வரை நாம் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் அதை தொடர்ந்து ஒரு நாளைக் கூட கடந்து செல்ல முடியாது. உடலில் இருந்து துர்நீர் வெளியேறவும், செரிமானம் ஏற்படவும், வியர்வை சுரக்கவும் தண்ணீர் தேவை முக்கியமானது. இதெல்லாம் தண்ணீர் குடித்தால் தான், சரியாக நடக்கும் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.