சரும பாதுகாப்பு
தண்ணீர் அதிகளவில் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அதே தண்ணீரில் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து குடித்து வந்தால், குங்குமப்பூவில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடண்ட்டுகள் சருமத்தில் இருக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடும். மேலும், அவை உருவாகாமலும் பார்த்துக் கொள்ளும். சரும பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது குங்குமப்பூ. உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செல்களில் இருந்து சருமத்திற்கு புத்துணர்வை அளிக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய சருமத்தில் பொலிவையும், இளமையையும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.