தேங்காய் பூக்கள் முன்பு கேரள மாநிலத்தில் மட்டும்தான் விற்பனையாகி வந்தன. தற்போது கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்கத் தொடங்கியுள்ளன. இந்த தேங்காய் பூவின் ஸ்பெஷலே பருவகாலத்தில் வரும் தொற்று நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கும். இப்போது பல்வேறு வகையான காய்ச்சல் வந்து பாடாய்படுத்துகின்றன. இந்த சூழலில் தேங்காய் பூவை வாங்கி உண்பது எவ்வளவு நல்லது தெரியுமா?