Bay Leaf in Rice : இந்திய சமையலறையில் பிரியாணி இலை வாசனைக்கு மட்டுமல்ல, அது ஒரு மருத்துவ பொக்கிஷம். பொதுவாக பிரியாணிக்கு மட்டும் பயன்படுத்தும் இந்த இலை, நம் ஆரோக்கியத்தை காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய உணவு முறையில் சாதம் ஒரு முக்கிய அங்கம். தினமும் பல வீடுகளில் இது சமைக்கப்படுகிறது. சாதம் வடிக்கும்போது இரண்டு பிரியாணி இலைகளைப் போடுவது ஒரு பழைய வழக்கம். இது வெறும் வாசனைக்கு மட்டுமல்ல, இதன் பின்னால் இருக்கும் ரகசியம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
26
பிரியாணி இலையை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
நம்ம மசாலா டப்பாவில் பிரியாணி இலைக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளுக்கு வாசனை சேர்க்க மட்டுமே இதை பயன்படுத்துவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், சாதம் வடிக்கும்போது பிரியாணி இலையைச் சேர்ப்பதால் பல நன்மைகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
36
அசிடிட்டி பிரச்சனைகளைத் தடுக்கும்
சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் சிலருக்கு அஜீரணம் அல்லது வயிறு உப்பசத்தை ஏற்படுத்தும். சாதத்துடன் பிரியாணி இலையைச் சேர்த்து வேகவைக்கும்போது, அதிலுள்ள ரசாயன கலவைகள் செரிமானத்தை எளிதாக்குகின்றன. இது கேஸ் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளைத் தடுக்கிறது.
பிரியாணி இலையில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சாதத்துடன் வேகும்போது, இந்த ஊட்டச்சத்துக்கள் அரிசியில் கலந்து, நம் உணவை மேலும் சத்தானதாக மாற்றுகின்றன.
56
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரியாணி இலை மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாதத்தில் இதைச் சேர்ப்பது கிளைசெமிக் குறியீட்டிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
66
இரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது
பிரியாணி இலையில் உள்ள ரூட்டின் மற்றும் காஃபிக் அமிலம் போன்ற சேர்மங்கள், இதயத்தின் இரத்த நாளச் சுவர்களை வலுப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், இதன் நறுமணம் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.