குழந்தைகள் ஆரோக்கியம் கெடும்
லேசான காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதும் ஆன்டிபயாட்டிக் மாத்திரையை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க மக்கள் கிளம்பி விடுகின்றனர். ஆனால் இதனால் தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிலருக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும். சென்டர்ஸ் பார் டிசிஸ் கன்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன் (Centers for Disease Control and Prevention) சொல்லும் தகவல்களின்படி, சளி, இருமல் என அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொண்ட 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிகிறது. இவர்களின் பெற்றோர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக குழந்தைகளுக்கு அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கொடுத்தது தான் காரணம் என சொல்லப்படுகிறது.