பல நோய்களுக்கு மருந்தாகும் வெங்காயத் தோல்.. இனி தூக்கி போடாதீங்க! இப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்!

First Published Jan 24, 2023, 5:27 PM IST

வெங்காய தோலை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். 

வெங்காயத்தை நாம் உணவு தயாரிப்பில் பயன்படுத்துகிறோம். இதன் தோலுரிக்கும் போது கண்ணீர் வந்தாலும், அதன் சுவை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆனால் மக்கள் சமையலுக்காக வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலைப் பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசிவிடுகிறார்கள். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டால், வெங்காயத் தோல்களை சேமிக்கத் தொடங்குவீர்கள். 

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. இதனால் உங்களுடைய கண்பார்வை அதிகரிக்கும். மாலைக்கண் நோயை தடுக்கும். குருட்டுத்தன்மை போன்ற நோய்களைத் தடுக்கிறது. இந்த பலனை பெற வெங்காயத் தோல்களை போட்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். இது நம் சருமத்தை மேம்படுத்துகிறது. 

வெங்காயத் தோலில் வைட்டமின் சி உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்கிறது. இதனால் சளி-இருமல் போன்ற பிரச்சனைகள் வராது. 

முடி உதிர்வை குறைப்பதில் வெங்காயத் தோல்கள் நல்ல பலனளிக்கின்றன. இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் ஊறவிடுங்கள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசவும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். 

இதையும் படிங்க: டாய்லெட் தண்ணீரில் காபி போட்டு கொடுக்கும் பெல்ஜியம் உணவகம்... தண்ணீரை வீணாக்க கூடாது என வினோதமான நடவடிக்கை!

இதய நோயாளிகளுக்கு வெங்காயத்தோல்கள் வரப்பிரசாதம். வெங்காயத் தோலைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, வெந்நீரில் கொதிக்க வைக்கவும். அதன் பின் வடிகட்டி குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும். 

இதையும் படிங்க: தங்க நகைகளை இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் கட்டாயம் கெட்டது நடக்கும்... தங்கத்தை தொலைத்தால்..?

click me!