இரவில் நடைப்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக, நடைப்பயிற்சி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது காலையில் செய்யும் பயிற்சி தான். சிலர் மாலையிலும் செய்வர். ஆனால் இரவில் யாரும் செய்வதை நாம் பார்த்திருக்கமாட்டோம். குறிப்பாக பலர் இரவு சாப்பாடை முடித்த பின் நேரடியாக தூங்க சென்றிடுவிடுவார்கள். ஆனால் இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்தால் உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. எனவே, இரவில் உணவு சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.