Monsoon health tips: மழைக்காலத்தில் ஏற்படும் 6 முக்கிய தோல் தொற்றுகள்: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்!

Published : Jul 14, 2026, 01:43 PM IST

மழைக்காலம் வெயிலிலிருந்து குளிர்ச்சி தந்தாலும், காற்றில் உள்ள ஈரப்பதத்தால் சருமத் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் எளிதாகப் பரவக்கூடிய இக்காலத்தில், அதிகம் தோன்றும் 6 முக்கிய தோல் தொற்றுகள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள்

PREV
17
சேற்றுப் புண் :

மழைநீர் தேங்கிய இடங்களில் நடப்பது மற்றும் நீண்ட நேரம் ஈரமான காலணிகள் அல்லது சாக்ஸ் அணிந்திருப்பது.

அறிகுறிகள்: கால் விரல்களுக்கு இடையில் தோல் உரிதல், கடுமையான அரிப்பு, எரிச்சல் மற்றும் வெள்ளை நிறத்தில் தோல் மாறுவது.

27
படைத் தாமரை / படர்தாமரை :

கழுத்து, அக்குள் மற்றும் தொடை இடுக்குகள் போன்ற வியர்வை அதிகம் தேங்கும் மடிப்புகளில் பூஞ்சை தொற்று ஏற்படுவது.

அறிகுறிகள்: சருமத்தில் வட்ட வடிவத்தில் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றுவதுடன், அதன் ஓரங்கள் சற்று உயர்ந்து காணப்படும். இதில் கடுமையான அரிப்பு இருக்கும்.

37
மயிர்க்கால் அழற்சி :

அதிகப்படியான வியர்வை மற்றும் அழுக்கின் காரணமாக சருமத்தில் உள்ள மயிர்க்கால்களில் (hair follicles) பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று ஏற்படுவது.

அறிகுறிகள்: மயிர்க்கால்களைச் சுற்றி சிறிய, வலிமிகுந்த மற்றும் சீழ் பிடித்த சிவப்பு நிறக் கொப்பளங்கள் தோன்றும்.

47
முகப்பரு மற்றும் எண்ணெய் சருமம் :

காற்றில் உள்ள ஈரப்பதத்தால் சரும துவாரங்கள் (pores) அடைபட்டு, எண்ணெய் சுரப்பு (sebum) அதிகரிப்பதால் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகுகின்றன.

அறிகுறிகள்: முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் அதிகமாகத் தோன்றுதல்.

57
வேர்க்குரு :

மழைக்கால உஷ்ணம் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக வியர்வைச் சுரப்பிகள் அடைபடுவது.

அறிகுறிகள்: அக்குள், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் சிறிய சிவப்பு நிறக் குமிழ்கள் தோன்றி, ஊசியால் குத்துவது போன்ற அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

67
தோலழற்சி / எக்ஸிமா :

காற்றில் உள்ள ஈரப்பதம் திடீரென மாறுபடுவதாலும், காளான்கள் (fungi) மற்றும் அசுத்தமான மழைநீர் சருமத்தில் படுவதாலும் இந்த அலர்ஜி ஏற்படுகிறது.

அறிகுறிகள்: தோல் வறண்டு போதல், செதில் செதிலாக உரிதல், கடுமையான அரிப்புடன் கூடிய சிவப்புத் தடிப்புகள்.

77
தடுப்பதற்கான எளிய வழிகள் :

சருமத்தை உலர்வாக வைக்கவும்: மழையில் நனைந்தால் உடனே குளித்துவிட்டு, உடலை, குறிப்பாக அக்குள், கால் விரல் இடுக்குகள் போன்ற மடிப்புப் பகுதிகளைத் துடைத்து உலர்வாக (Dry) வைத்திருக்க வேண்டும்.

ஆடைகள் தேர்வு: இறுக்கமான சிந்தெடிக் ஆடைகளைத் தவிர்த்து, காற்றோட்டமான பருத்தி (Cotton) ஆடைகளை அணியுங்கள். ஈரமான ஆடைகளையோ அல்லது சாக்ஸையோ நீண்ட நேரம் அணியக் கூடாது.

காலணி பராமரிப்பு: மழைக்காலத்தில் மூடிய காலணிகளுக்குப் பதிலாக, எளிதில் காயக்கூடிய திறந்தவெளி செருப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

தனிப்பட்ட சுகாதாரம்: உங்கள் துண்டு, சீப்பு, உடைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்க்கவும்.

சன்ஸ்கிரீன் முக்கியம்: மேகமூட்டமாக இருந்தாலும், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தைப் பாதிக்கும் என்பதால் தினமும் லேசான (Gel-based) சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories