காலை எழுந்தவுடன் நாம் செய்யும் சில பழக்கங்கள் ரத்தச் சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சர்க்கரை சேர்த்த பானங்கள், உடற்பயிற்சி இல்லாமை, தவறான காலை உணவு போதிய தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை தவிர்ப்பது உடல்நலத்திற்கு உதவியாக இருக்கும்
சர்க்கரை சேர்த்த தேநீர் அல்லது காபியுடன் நாளை தொடங்குவது
காலை எழுந்தவுடன் அதிக சர்க்கரை சேர்த்த தேநீர் அல்லது காபி குடிப்பது சிலருக்கு ரத்தச் சர்க்கரை வேகமாக உயர வழிவகுக்கலாம். குறிப்பாக வெறும் வயிற்றில் அதிக இனிப்பு கொண்ட பானங்களை தொடர்ந்து அருந்துவது நல்ல பழக்கமாக இருக்காது.
தேநீர் அல்லது காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ற மாற்றுகளைத் தேர்வு செய்வது சிறந்தது.
25
எழுந்தவுடன் உடலை இயக்காமல் இருப்பது
நீண்ட நேர தூக்கத்திற்குப் பிறகு உடல் அசைவின்றி இருப்பது வழக்கமானதாக இருந்தாலும், எழுந்ததும் சிறிது நேரம் நடப்பது அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது உடலைச் சுறுசுறுப்பாக்க உதவும்.
காலை நேரத்தில் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி, stretching போன்ற எளிய இயக்கங்களைச் சேர்ப்பது தினசரி செயல்பாட்டை தொடங்குவதற்கு உதவியாக இருக்கலாம்.
35
தவறான காலை உணவைத் தேர்வு செய்வது
காலை உணவைத் தேர்வு செய்வதும் முக்கியமானது. அதிக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது இனிப்பு உணவுகளை மட்டும் கொண்ட காலை உணவு ரத்தச் சர்க்கரையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதற்கு பதிலாக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ள சமநிலையான உணவைத் தேர்வு செய்வது நல்ல அணுகுமுறையாகும். காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை தேவைக்கேற்ப உணவில் சேர்க்கலாம்.
தூக்கத்தின் தரமும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இரவில் தொடர்ந்து குறைவாகத் தூங்குவது அல்லது தூக்க நேரம் முறையாக இல்லாமல் இருப்பது உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கக்கூடும்.
எனவே, தினமும் சீரான நேரத்தில் தூங்கச் சென்று போதுமான ஓய்வைப் பெறுவது காலை நேர ஆரோக்கியத்திற்கும் முக்கியம்.
55
காலை எழுந்தவுடன் மன அழுத்தத்துடன் நாளை தொடங்குவது
காலை எழுந்தவுடன் வேலை, குடும்பப் பொறுப்புகள் அல்லது பிற காரணங்களால் அதிக மன அழுத்தத்தை உணர்வதும் உடலில் சில ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதனால் சிலரிடம் ரத்தச் சர்க்கரை அளவில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எழுந்தவுடன் சில நிமிடங்கள் அமைதியாக இருப்பது, ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்வது அல்லது சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வது மனதை அமைதிப்படுத்த உதவலாம்.