இந்த தெளிவான பதிவுக்கு பின்னர் தான் அந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருச்சூர் பூங்குந்நத்தம் பகுதியிலுள்ள வீட்டில் பிரவின்நாத் விஷம் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார். தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: பெற்றோர் அட்சதை தூவ திருமணம் செய்த திருநர் ஜோடி.. காதலர் தினத்தன்று கேரளாவில் ருசிகரம்!
இந்த மரணத்திற்கு ஆன்லைன் ஊடகங்களே காரணம் எனக்கூறி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள முதல்வர் மற்றும் டிஜிபியிடம் திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். தன் காதல் கணவரின் மரணத்தால் மனமுடைந்த ஐஷுவும் கரப்பான் பூச்சி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை நடந்து வருகிறது.