தற்போதைய காலத்தில் ஆண்கள் பலரிடையே விறைப்புத்தன்மை குறைபாடு நிலவுகிறது. இந்த பிரச்சனை ஆண்களை அதிக அளவில் பலவீனப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நேரத்தில், அவர்கள் மனைவி அல்லது காதலிகள் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றன. ஏனெனில் ஆண்களுக்கு எழுச்சி தொடர்பான பிரச்னை ஏற்படுகையில், அவர்களில் பெரும்பாலானோர் மனம் நொந்து போகின்றனர். எனவே, அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு உறுதுணை கிடைப்பது முக்கியமாக உள்ளது. பாலியல் பிரச்னை சார்ந்த விஷயங்களில் துணையின் உறுதுணை கிடைப்பதைக் காட்டிலும் வேறு எந்த நம்பிக்கையும் பெரிதாக தோன்றாது.