தொண்டை வலி அல்லது தொண்டை புண் இருக்கும்போது நாம் உணவை விழுங்க மிகவும் சிரமப்படுவோம். அதிலும் எச்சில் விழுங்க படாதபாடு பட்டு தவிப்போர் இங்கு ஏராளம். ஒரு சொட்டு தண்ணீரை விழுங்குவதும் கடினம் தான். சிலருக்கு தொண்டை புண் ஏதேனும் கிருமி தொற்றால் ஏற்படலாம். சிலருக்கு குளிர்பானங்கள், உணவுகள் மூலம் வரலாம். தொண்டை வலியின் நிவாரணத்திற்காக மருத்துவ உதவியை அணுகும் முன் வீட்டு வைத்தியம் முயன்று பார்க்கலாம். தொண்டை வலியோ, தொண்டை புண்ணோ இருந்தால் வெந்நீர் மட்டுமே அருந்துங்கள்.