நோன்பு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் நாள் முழுவதும் தங்கள் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினம். ஆகவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை தொடர்ந்து பரிசோதிப்பது அவசியம். நோன்பு இருக்கும்போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில குறிப்புகளை பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் எச்ஓடி மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் (HOD and Endocrinologist) டாக்டர் சி.எஸ் துவாரகநாத் நமக்கு சொல்கிறார்.
1. ஓட்ஸ், சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு மாதிரியான அதிக ஆற்றலை தரும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மீன், பனீர், நட்ஸ் ஆகிய புரதங்களையும் உட்கொள்ளலாம். நிறைய திரவங்களை எடுத்து கொள்ளலாம். ஆனால் காபி, குளிர்பானம் போன்ற சர்க்கரை அல்லது அதிக காஃபின் உள்ள பானங்களை தவிர்க்கவும்.