செய்முறை:
கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த கொண்டைக்கடலையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி பின் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 2 வர மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் எடுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னியில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, பெருங்காயத்தூள்,2 வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி பரிமாறினால் சூப்பரான கொண்டக்கடலை சட்னி ரெடி!
நோய்,திருஷ்டி,தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள் என்னென்ன?யார் அணியலாம்?என்ன பலன்கள் பார்க்கலாம்