தீபாவளி நாட்கள் துவங்கிவிட்டாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், ஷாப்பிங் என ஒரு வாரம் முழுவதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. கூடவே இந்த நாட்களில் ஒரு வாரம் முழுவதும் விதமான பலகாரங்கள் வீட்டில் செய்யப்படும்அதில், குலோப் ஜாமுனும் நிச்சம் இடம்பெற்றிருக்கும். இப்போதெல்லாம், வீட்டில் விசேஷம் என்றாலும், தீபாவளி பண்டிகையின் போதும் குலோப் ஜாமுனை அதிக அளவில் செய்கிறார்கள்.
எப்போதும் கடைகளில் வாங்கி செய்யும், குலோப் ஜாமுனுன் இன்ஸ்டன்ட் மாவு கூட இல்லாமல், நம் வீட்டில் இருக்கும் இந்த ரவையை மட்டும் வைத்தே ஒரு சூப்பராக குலாப் ஜாமுன் செய்து அசத்தலாம். இந்த, ரவை குலோப் ஜாம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இப்போது, பேனை வைத்து வறுத்த அரைத்த ரவையை அதில் சேர்த்து ஒரு டம்ளர் ரவைக்கு 3 டம்ளர் பால் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள் பாலும் ரவையும் சேர்த்து, பேனில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதம் வரும் வரை கிண்டி விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.
பிறகு, மிதமான சூட்டில் இருக்கும் போதே அந்த ரவையும் பாலும் சேர்ந்து அந்த மாவை உருண்டை பிடித்து, வைத்து கொள்ளுங்கள்.
இப்போது இன்னொரு பேனில், சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும். ஒரு இரண்டு டம்ளர் சர்க்கரைக்கு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடுங்கள். இதில் ஒரு பின்ச் ஏலக்காயும் ஒரு பின்ச் குங்குமப்பூவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.