அடுப்பில் 1 பான் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்த பின் அதில் பன்னீர் துண்டுகளை மாவில் இருந்து எடுத்து எண்ணெய்யில் சேர்த்து தீயினை மிதமாக வைத்து விட வேண்டும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்த பிறகு,அதனை பன்னீரை எடுத்து தட்டில் டிஸ்யூ பேப்ர் மீது வைத்து எண்ணெய்யை வடிக்க செய்ய வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி ,காய்ந்த பின்னர் சீரகம் சேர்த்து தாளித்து பின் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி சிறிது உப்பு தூவி கிளறி விட வேண்டும். இப்போது டொமேட்டோ சாஸ், சோயா சாஸ், வினிகர் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நிமிடன வரை உயர் தீயில் வைத்து வதக்கி விட வேண்டும்.
இப்போது பொரித்து வைத்துள்ள பன்னீரை அதனை நன்கு மசாலாவுடன் சேரும் வரை பக்குவமாக கிளறி விட வேண்டும். பின் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி விட்டு இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியன் தூவி பரிமாறினால் சூப்பரான பன்னீர் மஞ்சுரியன் ரெடி!