முன்னதாக மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து கொள்ள வேண்டும். பொடித்த மிளகு , சீரகம் , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்யப்பட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிக்கறி என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 7 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
இறுதியாக குக்கரில் இருந்து இறக்கிவைத்து அதனுடன் கருவேப்பிலை, மல்லி இலை தூவி பரிமாறினால் நாட்டுக்கோழி ரசம் ரெடி!. நாட்டு கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இதனை தனியாக சூப் மாதிரியும் குடித்து சாப்பிடலாம். உடல் அலுப்பு தீரும்.