உங்களது முகத்தில் பருக்கள் இருந்தால் எலுமிச்சை சாறு ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் எலுமிச்சை சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கின்றன. அது பருக்களை அதிகமாக்குவது மட்டுமல்லாமல், புண்கள், கொப்புளங்கள் கூட வருவதற்கு வழிவகுக்கும்.
முகத்தில் பருக்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சருமத்தில் அரிப்பு, பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்றால் தக்காளி, எலுமிச்சை சாறு, தயிர் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக உடனே சரும நிபுணரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.