வெறும் 1 நிமிடத்தில்.. கரும்புள்ளிகளை போக்கும் அற்புத பொருள்.. இப்படி யூஸ் பண்ணுங்க!!

First Published Jun 11, 2023, 7:50 AM IST

கரும்புள்ளிகளை விரைவில் நீக்க ஆரஞ்சு தோலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

பெரும்பாலான மக்கள் கரும்புள்ளிகளுடன் போராடுகின்றனர். இது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முகப் பொலிவும் பாதிக்கப்படும். ஆயில் ஸ்கின் இருப்பவர்களுக்கு கரும்புள்ளிகள் எளிதில் ஏற்படும். சிலருக்கு மூக்கில் மட்டுமே இருக்கும். சிலர் நகங்களால் கரும்புள்ளிகளை நீக்க முயற்சி செய்வார்கள். இதனால் வலி தான் மிஞ்சும். ஆனால் வலி இல்லாமல் கரும்புள்ளிகளை நீக்க முடியும். வாங்க இங்கு காணலாம். 

ஆரஞ்சு தோலை வைத்து கரும்புள்ளி பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இதற்கு 2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி எடுத்து கொள்ளுங்கள். வீட்டிலேயே ஆரஞ்சு தோல் பொடி செய்ய முடியும். இதற்கு ஆரஞ்சு தோலை சில நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். முழுவதுமாக காய்ந்ததும் தோலை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இதை தான் கரும்புள்ளிகள் மீது பயன்படுத்த வேண்டும். இப்போது இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு பொடியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். கரும்புள்ளிகளை நீக்க இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசலாம். 

இந்த ஆரஞ்சு பொடி பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். அதை சிறிது நேரம் தோலில் நன்றாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது வட்ட இயக்கம் அல்லது முன்-பின் முறையைப் பின்பற்ற வேண்டும். இப்படி சுமார் 1 நிமிடம் முகத்தை ஸ்க்ரப் செய்த பிறகு, முகத்தை கழுவுங்கள். கரும்புள்ளிகள் விரைவில் மறையும். 

இதையும் படிங்க: குழந்தைகள் பாலுடன் இந்த பழத்தை கலந்து வெறும் 10 நாட்கள் குடித்தால் மூளை அபார வளர்ச்சி அடையும்.. ட்ரை பண்ணுங்க!

ஆரஞ்சு தோல் பொடி நன்மைகள்: 

ஆரஞ்சு தோலை பொடி செய்து முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் நீங்குவது மட்டுமின்றி உங்கள் சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.

 ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது துளைகளை அடைக்க உதவுகிறது. முகத்தில் உள்ள துளைகள் தொடர்ந்து அடைத்துக்கொண்டால், அது முகப்பரு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

இதையும் படிங்க: வாழைப்பழங்கள் 7 நாள்கள் ஆனாலும் கெட்டு போகாமல் ப்ரெஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்!!

click me!