தற்போது பெரும்பாலானோர் கருவளையங்களால் அவதிப்படுகிறார்கள். தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு பிரச்சனை போன்ற பல காரணங்களால் கண்களுக்கு கீழே கருவளையம் வருகிறது. இதனை போக்க பலர் சந்தையில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் காபி தூளுடன் சில பொருட்களை சேர்த்து மாஸ்காக போட்டால் விரைவில் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை சுலபமாக மறைந்துவிடும். அவை என்னவென்று இப்போது இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.