தலையணை உறையில் உள்ள பாக்டீரியா, அழுக்கு போன்றவை சரும வெடிப்பை உண்டாக்கும். பட்டுத் தலையணை உறைகளைப் பயன்படுத்தினால் சருமத்தை மேம்படுத்தலாம். இதனால் முடியின் ஆரோக்கியமும் மேம்படும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பருத்தி போர்வைகளை பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது பட்டு போர்வைகளை உபயோகம் செய்பவர்களுக்கு பரு போன்ற பிரச்சனை குறைவாக உள்ளதாம். பிற துணிகளை விட பட்டுத்துணிகள் சருமத்திற்கு மென்மையாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.