இளநரையா? கடுகு எண்ணெயுடன் இவற்றை மட்டும் கலந்தால் போதும்.. உங்கள் முடி கருகருவென மாறும்..!!

First Published Sep 29, 2023, 3:01 PM IST

நரை முடியால் அவதிப்படுவர்கள் இனி கவலைபட வேண்டாம். கடுகு எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து பயன்படுத்தலாம். இதனால் உங்கள் தலைமுடிக்கு மருதாணி அல்லது சாயம் பூச வேண்டிய அவசியமில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் இளைஞர்கள் வரை வெள்ளை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஒரு காலத்தில் முடி நரைப்பது முதுமையின் அறிகுறியாக இருந்த நிலையில், இன்றைய காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை போன்ற காரணங்களால் தலைமுடி வேகமாக நரைக்கத் தொடங்குகிறது. 

அவற்றை மறைக்க, பல வகையான ஹேர் டைகள் கடைகளில் விற்பனையில் உள்ளது.ஆனால் அவற்றைப் பயன்படுத்துவது முடியை சேதப்படுத்தும் என்பதும் உண்மை. ஏனெனில் இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 
 

ஹேர் கலர் மற்றும் டையில் உள்ள ரசாயனங்கள் காரணமாக கடைகளில்  கிடைக்கும் ஹேர் கலரை பலரும் பயன்படுத்துவதில்லை. நீங்களும் வெள்ளை முடியால் அவதிப்பட்டு, இயற்கையான முறையில் கருப்பாக்க விரும்பினால், இதற்கு எளிமையான வழியை முயற்சி செய்யலாம். 

கடுகு எண்ணெய் முடிக்கு நல்லது. இதில் உள்ள பொருட்கள் கூந்தலை கருமையாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும், வலுவாகவும் மாற்ற உதவுகிறது. பழங்காலத்தில் கூட நம் தாத்தா, பாட்டி இந்த எண்ணெயை தலைமுடிக்கு தடவுவார்கள். இந்த எண்ணெயில் சில பொருட்களைக் கலந்து செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்

அதன்படி, பொருட்களை கடுகு எண்ணெயுடன் கலந்து தேய்த்தால் முடி கருமையாகாது. இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இது உங்கள் தலைமுடியை இயற்கையாக கருமையாக்கவும் முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது. எனவே இந்த எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். 

முடியை கருமையாக்க வீட்டிலேயே எண்ணெய் தயாரிப்பது எப்படி இந்த எண்ணெயை தயாரிக்க, உங்களுக்கு ஒரு கிண்ணம் கடுகு எண்ணெய் தேவை. கற்றாழை ஒரு துண்டு. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, 2 நடுத்தர அளவு வெங்காயம், 1 தேக்கரண்டி கருப்பு சீரகம் தேவை.

இந்த எண்ணெயைத் தயாரிக்க, ஒரு இரும்பு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடாக்கி , மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து 10-15 நிமிடங்கள் சூடாக்கவும். பிறகு அதை ஒரு இரும்பு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும். ஆறிய பிறகு எண்ணெயை வடிகட்டி மற்றொரு பாட்டிலில் வைக்கவும்.
 

இப்போது இந்த எண்ணெயை முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். முடியின் வேர்கள் முதல் நுனி வரை நன்றாகப் பயன்படுத்துங்கள். தேவைப்பட்டால் இரவில் எண்ணெய் தடவி காலையில் குளிக்கவும் அல்லது 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.

இந்த எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் மாற்ற உதவுகிறது. சிறந்த முடிவுகளுக்கு, இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். சில நாட்களில் அதன் விளைவை நீங்கள் காணத் தொடங்குவீர்கள்.

click me!