நெயில் பாலிஷ் இருந்தா போதும் மருவை விரட்டி விடலாம்..!!

First Published Oct 31, 2022, 12:04 PM IST

மருக்கள் உடலின் எந்த பகுதியிலும் உண்டாகும். உடல் அழகை கெடுக்கும் அளவுக்கு மருக்கள் வளர்ச்சி அடையக்கூடியவை. அதை நீக்குவதற்கு மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் இருந்தாலும், வீட்டு மருத்துவ முறையிலும் எளிதாக நீக்கலாம்.
 

பெரியளவில் உடல் உழைப்பில்லாமல் இருப்பவர்கள், குளிக்கும் போது உடல் பாகங்களை நன்றாக சுத்தம் செய்து கழுவாதவர்கள் உள்ளிட்டோருக்கு எளிதில் மருக்கள் வந்துவிடும். உடலின் எந்த பகுதியிலும் மருக்கள் தோன்றும். ஒருசிலருக்கு முகத்தில் தோன்றி, அழகையே கெடுத்துவிடும். ஹெச்.பி.வி வைரஸின் தன்மையை பொறுத்து மருக்கள் தோன்றுவதிலும் பல்வேறு வகைகள் உண்டு. இதை போக்க மருத்துவ முறையில் பல்வேறு வழிகள் உண்டு. எனினும், வீட்டு மருத்துவ முறைகளில் மருக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகளை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

செலஃபைன் டேப் கொண்டு நீக்கலாம்

உடலில் எந்த இடத்தில் மரு தோன்றியதோ, அந்த இடத்தில் டக்ட் டேப் அல்லது செலஃபைன் டேப்பை ஒட்டிவிட வேண்டும். தண்ணீர் எதுவும் உட்புகாத வண்ணம், அதை அப்படியே ஒட்டி வைக்க வேண்டும். குறைந்தது ஆறு நாட்களுக்கு அதை அப்படியே விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்களைக் கழித்து அதை நீங்கள் நீக்கிய பிறகு, அந்த இடத்தை தண்ணீர் கொண்டு குறைந்தது 20 நிமிடம் கழுவ வேண்டும். உங்களிடம் ஃப்யூமிஸ் ஸ்டோன் இருந்தால், அதன்மீது மெதுவாக தேய்க்கவும். மருக்கள் உடனடியாக உதிர்ந்துவிடும்.

தேயிலை மரத்தின் எண்ணெய்

பலருக்கும் அறியாத வழிமுறை இது. தேயிலை மர எண்ணெய்யின் மூலம் மருக்களை எளிதாக நீக்கலாம். தேயிலையில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுவதும் பலருக்கும் புதிய தகவலாக இருக்கும். உங்களுக்கு தேயிலை எண்ணெய் கிடைத்தால், அதை மூன்று சொட்டு மட்டும் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சில துளி ஆமணகுக்கு எண்ணெய்யையும் கலந்துகொள்ள வேண்டும். அதை மருக்கள் உள்ள பகுதிகளில் தேய்த்து வரவேண்டும். ஒரு வாரம் இப்படி செய்து வந்தால், விரைவாகவே மருக்கள் உதிர்ந்துவிடும்.

விரல் பூச்சு

மிகவும் எளிமையான, அதே சமயத்தில் செலவில்லாத வழிமுறை இதுதான். மருக்கள் மீது நெயில் பாலிஷ் தடுவுவதால், அதற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போய்விடும். நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை இந்த செயல்முறையை தொடர்ந்தால், வெறும் 5 நாட்களுக்குள் மரு உதிர்ந்துவிடும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு மரு மிது நெயில் பாலீஷை தடவிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு மீண்டும் தடவுங்கள். இப்படியே செய்து வந்தால் சீக்கரமே பலன் கிடைக்கும். இந்த செயல்முறையில் தழும்பும் ஏற்படாது.

ஆஸ்ப்ரின்

பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆஸ்ப்ரின் தீர்வை தருகிறது. அதேபோன்று மரு போன்ற சரும பிரச்னைகளுக்கும் இந்த மாத்திரை தீர்வை வழங்குவதாக உள்ளது. இந்த மருந்தில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இது மருவுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. ஒரு டம்பளர் தண்னீரில் இரண்டு ஆஸ்ப்ரின் மாத்திரைகளை கலந்துவிட்டு, அந்த நீரை மருக்கள் மீது தடவ வேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் சுத்தம் செய்து எடுக்கவும். இந்த செயல்முறையை 3 நாட்களுக்கு செய்துவந்தால், விரைவாகவே மரு உதிர்ந்துவிடும்.

வைட்டமின் மாத்திரைகள்

மருந்துக் கடைகளில் விற்கப்படும் வைட்டமின் ஈ மாத்திரைகளில் ஒருவித எண்ணெய் இருக்கும். அதை மரு மீது தடவி வருவதும் நல்ல பலனை தரும். மருவில் அதை தடவி விட்டு, இரவில் வைத்திருந்து மறுநாள் காலையில் சுத்தம் செய்தால், இரண்டே வாரங்களில் மரு உதிர்ந்துவிடும். இதனால் தழும்பு எதுவும் ஏற்படாது. அதேபோன்று வைட்டமின் சி மாத்திரையை தண்ணீரில் கலந்து தடவி வருவதும், மரு நீக்கத்திற்கு நல்ல பலனை அளிக்கும்.
 

click me!