வெள்ளரிக்காய் பேசியல் மாஸ்க்
வெள்ளரிக்காய், புதினா மற்றும் முட்டை வெள்ளைக்கரு சேர்த்து, நன்கு மிக்ஸியில் அரைத்து உடனடியாக பேசியல் மாஸ்க் செய்யலாம். முகத்தை நன்கு கழுவிய பின்னர், இந்த கூழை முகத்தில் மாஸ்க் போல தடவி விட வேண்டும். கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்துவிட்டு, 25 நிமிடங்கள் நன்கு உலர வைத்து, குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இந்த பேசியலை செய்த பிறகு வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், கெமிக்கல் கலந்த சோப்பைக் கொண்டு முகத்தை கழுவக் கூடாது. வீட்டிலேயே செய்யப்படும் இந்த ஆர்கானிக் பேசியலை மாதம் ஒரு முறையாவது போட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.