பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!

First Published Apr 17, 2024, 2:01 PM IST

நடிகர் மன்சூர் அலிகான், பிரச்சாரத்தின் போது திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

Mansoor Ali khan

நடிகரும், பாராளுமன்ற வேட்பாளருமான மன்சூர் அலிகான், கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில், தற்போது வேலூரில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகிறார் மன்சூர் அலிகான் என்பது அனைவரும் அறிந்ததே.
 

Mansoor Alikhan

இன்று மாலை 6 மணியோடு, பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், வேலூர் குடியாத்தம் பகுத்தியை சுற்றி உள்ள இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்தார். அப்போது இவருக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கும் நிலைக்கு சென்றார்.
 

Nayanthara : நீங்க பிளான் சாரீ கட்டுனா கூட.. பட்டு புடவைப்போல் மின்னுதே! ஜொலிக்கும் நகைகளோடு சொக்க வைத்த நயன்!

Actor Mansoor Ali Khan

இதைத்தொடர்ந்து அவரது தொண்டர்கள், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் மன்சூர் அலிகானை அனுமதித்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் அவருக்கு என்ன பிரச்னை என்பது குறிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
 

அடிக்கடி உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்த போதிலும், தன்னுடைய வலி வேதனைகளை வெளியே காட்டி கொள்ளாமல், தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் மன்சூர் அலிகான். எனினும் ரசிகர்களும் தொண்டர்களும், மன்சூர் அலிகானுக்கு என்ன ஆனது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அட கடவுளே... பணத்துக்காக வயசு வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! யார் யார் தெரியுமா?
 

click me!