நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு தளபதி விஜய்க்கு தானாகவே அமைந்தது. அதேபோல் சினிமாவில் கதாநாயகனாக மாறும் வாய்ப்பும், இவருக்கு மிக எளிதாகவே கிடைத்தது. ஆனால் வாரிசு நடிகர் என்கிற காரணத்தினாலேயே தன்னுடைய முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்திற்காக மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தார் விஜய். தளபதி விஜய் அதை கடந்து வரவே பல மாதங்கள் ஆனது என பேட்டி ஒன்றியில் விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்திருந்தார்.