நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு தளபதி விஜய்க்கு தானாகவே அமைந்தது. அதேபோல் சினிமாவில் கதாநாயகனாக மாறும் வாய்ப்பும், இவருக்கு மிக எளிதாகவே கிடைத்தது. ஆனால் வாரிசு நடிகர் என்கிற காரணத்தினாலேயே தன்னுடைய முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்திற்காக மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தார் விஜய். தளபதி விஜய் அதை கடந்து வரவே பல மாதங்கள் ஆனது என பேட்டி ஒன்றியில் விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்திருந்தார்.
தளபதி விஜய்க்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவருடைய டான்ஸ் டச்சை வர்ணிக்க வார்த்தை இல்லை.
அரசியலில் இறங்க உள்ளதால் தன்னுடைய 69-ஆவது படம் தான் கடைசி படம் என தளபதி அறிவித்துள்ளார். விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்திற்கு விஜய்க்கு சம்பளமாக 200 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் தன்னுடைய கடைசி படமாக உருவாகும் தளபதி 69 படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.