aambala
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் உருவான "ஆம்பள" என்கின்ற திரைப்படத்தை சுந்தர்சி இயக்கியிருந்தார். அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான "ஆக்சன்" என்ற படத்தையும் சுந்தர் சி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதன் முதலில் விஷாலை வைத்து சுந்தர் சி கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் "மதகஜராஜா". சுமார் 11 ஆண்டுகளாக இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அப்படம் குறித்து சுந்தர் சி-யிடம் கேட்கப்பட்டது.
Anjali
அப்போது பேசிய அவர் அந்த திரைப்படத்தை எடுத்து முடித்து 11 ஆண்டுகள் ஆகின்றது, இன்றைக்கு அந்த திரைப்படம் வெளியானாலும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகும். நானும், விஷாலும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பலமுறை கெஞ்சி கூட கேட்டு விட்டோம், நாங்கள் பணத்தை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்வதாகவும் கூறினோம்.