இயக்குனர் பாலா கடந்த 2022 ஆம் ஆண்டு, நடிகர் சூர்யாவை வைத்து இயக்குவதாக அறிவித்த திரைப்படம் 'வணங்கான்'. இந்த படத்தை சூர்யாவே தன்னுடைய 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சுமார் ஒரு மாதம் வரை நடந்த நிலையில் திடீரென நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நடிகர் சூர்யா இப்படத்தை விட்டு வெளியேறிய உடனே, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ என்பவரும் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இவர் அதிக டேக் வாங்கியதால், கடுப்பாகி நடிகை மமிதா பைஜுவை இயக்குனர் பாலா அடித்து விட்டதாக, சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மையில் எனக்கு இயக்குனர் பாலாவுடன் எந்த ஒரு மோசமான அனுபவமும் கிடையாது. நான் அவருடன் ஒரு வருடத்திற்கு மேல் பயணித்துள்ளேன். நான் சென்னையில் இருந்த போது, என்னை இயக்குனர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டனர். இயக்குனர் குழுவினருடன் எனக்கு நல்ல பாண்ட் இருக்கிறது.
இந்த படத்தில் இருந்து நான் விலக காரணம், மலையாளத்தில் எனக்கு இன்னொரு படம் நடிக்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக மட்டுமே, இப்படத்தில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.