Anna serial: கனியை கடத்த வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள்; காப்பாற்றினாரா சண்முகம்? அண்ணா சீரியல் டுவிஸ்ட்

Published : Mar 27, 2024, 04:18 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டுக்கு வர கனிக்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
Anna serial: கனியை கடத்த வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள்; காப்பாற்றினாரா சண்முகம்? அண்ணா சீரியல் டுவிஸ்ட்
Anna serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டுக்கு வர கனிக்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சடங்கு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து, கனியை கூட்டி வந்து பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்க செல்ல, அவள் வைகுண்டத்தின் காலில் விழுது ஆசீர்வாதம் வாங்க செல்கிறாள். அப்போது வைகுண்டம் இந்த வீட்டோட குல தெய்வம் சண்முகம் தான், அவன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கு என சொல்ல, கனி அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். 

24
Zee Tamil Anna serial

கனி நம்மை விட்டு பிரிந்திட போறா என்ற வேதனையுடன் சண்முகம் இருக்க, அதை பார்த்து வைகுண்டம் பரணி பீல் பண்ணுகின்றனர். அண்ணனை விட்டு போயிட மாட்டல என்று சண்முகம் மனசுடைந்து கேட்க, கனி உன்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டேன், உன் கூடவே இருக்கணும் என்பதற்காக கல்யாணம் கூட பண்ணிக்க மாட்டேன் என்று சொல்ல, சண்முகம் கனியை கட்டியணைத்து கண் கலங்குகிறான். 

மறுபுறம் சௌந்தரபாண்டியன், நீ போய் அது உன் பொண்ணு தானானு கன்ஃபார்ம் பண்ணிட்டு வாமா என மீனாட்சியை சனியனுடன் சண்முகம் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வந்த மீனாட்சி சண்முகம் வீட்டில் கதவை தட்ட கனி கதவைத் திறக்கிறாள்.

இதையும் படியுங்கள்... Robo Shankar : மகள் இந்திரஜாவின் திருமணத்திற்கு இவ்வளவு விலையுயர்ந்த காரை சீதனமாக கொடுத்தாரா ரோபோ ஷங்கர்?

34
Anna serial Update

மகளைப் பார்த்ததும் மீனாட்சி திகைத்து நிற்க, கனி யார் நீங்க என்ன வேண்டும் என்று கேட்க, தண்ணி கேட்க வந்ததாக சொல்ல, கனியும் தண்ணீர் கொண்டு போய் கொடுக்கிறாள். வீட்டில் ஏற்பாடுகள் தடபடலாக இருக்க, மீனாட்சி என்ன விஷயம் என்று கேட்க, கனி பெரிய மனுஷியாகி விட்ட விஷயத்தை சொல்லி பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ என சொல்ல, மீனாட்சி காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள் கனி. 

அதன் பிறகு பாக்கியத்தை பார்த்து இது உங்க பொண்ணா என்று மீனாட்சி கேட்க, இல்ல என் அண்ணன் பொண்ணு என பாக்கியம் பதில் சொல்கிறாள். இவங்க அம்மா இல்லையா என்று கேட்க, அவங்க அம்மா இப்போ வீட்ல இல்ல என்று சொன்னதும், கனி தான் தன்னுடைய மகள் என்பதை உறுதி செய்து கொள்கிறாள். 

44
Anna serial Today Episode

அதன் பிறகு ஸ்டேஷனுக்கு வந்த மீனாட்சி அது என் பொண்ணு தான். போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்ல, சௌந்தரபாண்டி அதெல்லாம் வேண்டாம் சண்முகம் இல்லாத நேரமா பார்த்து சொல்றேன், வீடு புகுந்து கனியை தூக்கிட்டு போயிடுங்க என்று ஐடியா கொடுக்க அவர்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர். சௌந்தரபாண்டி மைண்ட் வாய்ஸில் பிரசிடெண்ட் பதவியில் மட்டுமல்லாமல் உனக்கு தர்ம கர்த்தா ஆகணுமா அதுக்குத்தான் வைக்கிறேன் ஆப்பு என பேசிக்கொள்கிறார். 

பிறகு சௌந்தரபாண்டி கொடுத்த ஐடியா படி சண்முகம் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் ரவுடிகள் நுழைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Siddharth weds Aditi Rao Hydari : நடிகை அதிதி ராவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நடிகர் சித்தார்த்

Read more Photos on
click me!

Recommended Stories