சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொடர்ந்து தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சந்தியா காணாமல் போயிருந்தார். பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காணாமல் போன சந்தியா மீண்டும் வீடு திரும்பினார். அவர் வீட்டிற்கு வந்த மறுநாளே திடீரென ஜனார்த்தனன் வீடு புகுந்து சந்தியாவை கடுமையாக தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தி கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார்.