பழிக்கு பழி.. நாட்டு வெடிகுண்டு வீசி.. லாரி செட் உரிமையாளர் வெட்டி படுகொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்..!

Published : Aug 17, 2023, 08:49 AM ISTUpdated : Aug 17, 2023, 08:53 AM IST

தூத்துக்குடியில் பழிக்கு பழியாக லாரி செட் உரிமையாளர் சக்திவேல் நாட்டு வெடிகுண்டு வீசி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
பழிக்கு பழி.. நாட்டு வெடிகுண்டு வீசி.. லாரி செட் உரிமையாளர் வெட்டி படுகொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்..!

தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற வாலிபர் கடந்த ஜனவரி 28ம் தேதி 10க்கும் மேற்பட்ட கும்பலால் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தார். இதனால், சக்திவேல் மீது கருப்புசாமி தரப்பினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். 

23

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் கருப்பசாமியின் ஆதரவாளர்கள் நேற்று சங்கரப்பேரி சாலையில் அமைந்துள்ள சோழன் லாரி புக்கிங் ஆபீஸ் உரிமையாளர் சக்திவேல் அலுவலகம் வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. 

இதையும் படிங்க;- என் புருஷன் இருக்கும் வரைக்கும் உல்லாசமாக இருக்க முடியாது!ஸ்கெட்ச் போட்டு கொலை!உடலை என்ன செய்தார்கள் தெரியுமா?

33

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் பழிக்கு பழியாக லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  தந்தையை கட்டையால் அடித்து கொன்ற திமுக பிரமுகர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

click me!

Recommended Stories