இந்நிலையில், இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி3 பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் நேற்று மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.